(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க
அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்
நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமையேற்றுள்ள எம் .உதயகுமார் மட்டக்களப்பு மெதடிஸ்த
மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார் .
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
அரசாங்க அதிபராக பதவி ஏற்றதன் பின் தான் கல்வி பயின்ற
கல்லூரிக்கு விஜயத்தை இன்று மேற்கொண்டார் .
இதன் போது புதிய அரசாங்க அதிபரை
கல்லூரி அதிபர் விமல்ராஜ்
தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள்
,மாணவர்கள் ,கல்லூரி பழைய மாணவர்கள்
ஆகியோரினால் வரவேற்பு அளிக்கப்பட்டு அவருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து தனது ஆசானான ஓய்வுநிலை அதிபர் பிரின்ஸ் காசினாதரை
சந்தித்து ஆசிவாதம் பெற்றுக்கொண்டார்
.