கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமா ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில டிப்ளோமா ஆசிரியர்களுக்குரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன்,சீ.யோகேஸ்வரன்,அலிசாகீர் மௌலானா,கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் கலபதி,முன்னாள் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞர்.கிருஸ்ணபிள்ளை,சிப்லிபாரூக்,எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மூவினங்களையும் சேர்ந்த 272பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் , கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் உட்பட செயலாளர்கள்,வலய கல்விப்பணிப்பாளர்கள்,அதிபர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.