கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு கதிரைகள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு   மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு  கதிரைகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


கிழக்கு மாகாண சபையின்  முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட 2,9000.00  ரூபா  நிதியில்  இருந்து மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு கதிரைகள் வழங்கி வைக்கப்படது .

மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் கே .மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின்  முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா கலந்துகொண்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட 07  கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு கதிரைகள் வழங்கி வைக்கப்பட்ட்டது .


இந்நிகழ்வில் மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் ,கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்