புனித யோசேப்வாஸ் ஆண்டின் நிறைவு நிகழ்வுகள்

(லியோன்)

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையினால்  பிரகடனப்படுத்தப்பட்ட புனித யோசேப்வாஸ்  ஆண்டின் நிறைவு நிகழ்வுகள் மட்டக்களப்பில்  நடைபெற்றது


திருத்தந்தையினால்  2017  ஆம் ஆண்டு  புனித யோசேப்வாஸ்  ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு  இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தினால் வழிநடத்தப்பட்ட புனித யோசேப்வாஸ் ஆண்டினை   இலங்கை கத்தோலிக்க மறை மாவட்டத்தில்   நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டினை நிறைவு செய்யும்  விசேட திருப்பலியும் , நிறைவு நிகழ்வுகளும் இலங்கை கத்தோலிக்க மறை மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன  .

இதற்கு அமைய மட்டக்களப்பு மறை  மாவட்ட  மேய்ப்புப்பணிச்சபையின் ஏற்பாட்டில் மறை  மாவட்ட  ஆயரும் மேய்ப்புப்பணிச்சபை   தலைவருமான  கலாநிதி    ஜோசப்  பொன்னையா  ஆண்டகை   தலைமையில்  மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு தொடர்ந்து பேரணியும் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மண்டபத்தில் விசேட நிறைவு நிகழ்வுகள்  நடைபெற்றது

நடைபெற்ற ஆண்டு நிறைவு நிகழ்விலும்  திருப்பலியிலும்   மட்டக்களப்பு மறை  மாவட்டத்தின்   அனைத்து கத்தோலிக்க பங்கு  மேய்ப்புப்பனிச் சபைகளின்  உறுப்பினர்கள் ,ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் , அப்போஸ்தலிக்க சபை உறுப்பினர்கள்  பங்கு  பக்தி சபையினர்  . அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் மற்றும்  பொது நிலையினர்  என பலர்  கலந்துகொண்டனர்