கைதிகளுக்கு காசநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு


(லியோன்)


மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு  காசநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது  .


மட்டக்களப்பு சிறைச்சாலை நிறுவாகத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு காசநோய் தொடர்பான விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு   மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றது 

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளின் நலன் கருதி  சிறைச்சாலை அத்தியட்சகரின்  கே .எம் . யு , எச் .அக்பர்  ஆலோசனைக்கும் அமைவாக சிறைச்சாலை  பிரதம ஜெயிலர்  என் .பிரபாகரன் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது .


நடைபெற்ற  விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலைய பொறுப்பதிகாரி வைத்தியர் கே தயாகாந்தன் , பொது சுகாதார பரிசோதகர்  எ எல் .எம் . ரகமத்துல்லா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர் .