மட்டக்களப்பு மாவடிமுன்மாரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் உணர்வுபூர்வமான மாவீரர் தின நிகழ்வு

மாவீரர் தின நிகழ்வு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர்மல்க மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச பொது அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட இந்த மாவீரர் தின நிகழ்வானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட மாவீரர்களின் குடும்பத்தினர்இபொதுமக்கள்இஇளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் குடும்பத்தினர் ஈகச்சுடர் ஏற்ற உணர்வுபூர்வமாக மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது மாவீரர் கீதம் ஒலிக்கப்பட்டதுடன் உணர்வெழுச்சி பாடல்களும் ஒலிபரப்பட்டன.