(லியோன்)
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ,கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான சிவநேசத்துரை
சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட கிழக்குமாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதார உதவி
திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இதற்கு அமைய மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடை ,நொச்சிமுனை ஆகிய கிராம சேவை
பிரிவுகளில் வாழ்கின்ற வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன
இதன் கீழ் உப்போடை ,நொச்சிமுனை
கிராம சேவை பிரிவுகளில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு வீடுகள்
திருத்துவதற்கான கூரை தகடுகள் மற்றும்
சிமெந்து பக்கட்டுக்கள் வழங்கும் நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி
திருமதி செல்வி மனோகர் தலைமையில் இன்று மாலை
கல்லடி உப்போடை பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில்
நடைபெற்றது
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள் , வாழ்வாதார
உதவிகளை பெரும் பயனாளிகள் கலந்துகொண்டனர்