(லியோன்)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் தேசிய ,,மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை
கௌரவிக்கும் நிகழ்வு (17) செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி – உப்போடை
விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் 2017 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
தேசிய மட்டத்திலும் மாகான மட்டத்திலும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி .டி .ஹரிதாஸ் தலைமையில்
பாடாசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
நடைபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் வெற்றிப்பெற்ற
மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் , பதக்கங்களும் , சான்றிதழ்களும் அதிகளினால்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் அதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்
பணிப்பாளர் ஆர் .பாஸ்கரன் , பாடசாலை ஸ்தாபகர் குடும்ப உறுப்பினரான திருமதி .வி
.கோபிகிருஷ்ணா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள்
கலந்துகொண்டனர்