(லியோன்)
உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணியில்
இணைந்துகொள் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு
சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் சிறைச்சாலை மாபெரும் இரத்ததான
முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் பல சமூக பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற
நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும்
இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் வைத்தியசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட
வேண்டுகோளுக்கு இணங்க இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிரதம
ஜெயிலர் என் .பிரபாகரன்
ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர் தலைமையில் இன்று காலை 10.00
மணி முதல் நண்பகல்
01.00 மணிவரை இந்த இரத்ததான
முகாம் நடாத்தப்பட்டது
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில்
நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி சங்க
உத்தியோகத்தர்கள் , சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை இரத்தவங்கி பிரிவு வைத்தியர்
மனோ கிரிசாந்தன் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ,
வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , கைதிகளின்
உறவினர்கள் கலந்துகொண்டனர் .