கோலாகலமாக நடைபெற்ற மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்ப கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கோலாகலமான முறையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோகித போகொல்லாகம கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் கி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,விசேட அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிசாம் மற்றும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

மட்டக்களப்ப கல்வி வலயத்தில் பல்வேறு சாதனைகளைப்படைத்து கிழக்கு மாகாணத்தின் பெருமையினை இலங்கை முழுவதுக்கும் கொண்டுசென்ற பெருமையினைக்கொண்டதாக வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை இருந்துவருகின்றது.

இதன்போது கற்றல் செயற்பாடுகள்,இணைப்பாட விதான செயற்பாடுகளில் பாடசாலை மட்டம் மாகாண மட்டம் தேசிய மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்கள் அதிதிகளினால் கௌவிக்கப்பட்டனர்.

இந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அதிதிகளும் இதன்போது நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.