மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி சம்பியன்.

(சசி துறையூர் ) தேசிய இளைஞர்  2017ம்  வருடத்திற்கான தேசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான கிறிக்கட் சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி சம்பியன் கிண்ணத்தை தட்டிக் கொண்டது.

கடந்த 27.09.2017 அன்று ஆரம்பமாகிய 29வது தேசிய இளைஞர் விளையாட்டுப்போட்டி அனுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான கிறிக்கட் சுற்றுப்போட்டியில் குருணாகல் திருகோணமலை மகளீர் அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம்  இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .