இலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது.

(சசி துறையூர் )இலங்கையின் ஆடவர் இளையோர் கபடி சம்பியன் கிண்ணம் மட்டக்களப்பு வசமானது.

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மட்டக்களப்பு ஆடவர் அணி சம்பியன் கிண்ணம் வென்றது.

அனுராதபுரம் பொது விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இலங்கை இளையோர் தேசிய விளையாட்டு விழாவின் ஆடவர் கபடி போட்டீயின் இறுதிப்போட்டி காலி மற்றும் மட்டக்களப்பு அணிகளுக்கிடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு அணி இறுதிப் போட்டியிலும் காலி ஆடவர் அணிக்கு பலத்த சவாலை ஏற்படுத்தி மிகத்திறமையாக வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

மேலும் முப்பத்தியொன்றுக்கு (31) நாற்பத்திமூன்று என்ற (43) என்ற புள்ளிக்கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்றதாக கிரான் பிரதேச இளைஞர்சேவை அதிகாரி த.விந்தியன் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.