இலங்கையின் தேசிய இளையோர் மகளீர் கபடி சம்பியன் கிண்ணம் யாழ்ப்பாணம் வசமானது

(சசி துறையூர் )இலங்கையின் தேசிய இளையோர்
மகளீர் கபடி சம்பியன் கிண்ணம் யாழ்ப்பாணம் வசமானது.

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கபடிப் போட்டியில் மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்ட மகளீர் அணிகள் மோதிக்கொண்டன

இப் போட்டியில் யாழ் மகளீர் அணி சம்பியன் கிண்ணம் வென்றது.

அனுராதபுரம் பொது விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இலங்கை இளையோர் தேசிய விளையாட்டு விழாவின் மகளீர் கபடி போட்டீயின் இறுதிப்போட்டி யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு அணிகளுக்கிடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தெரிவான இரு அணிகளும் இறுதிப் போட்டியிலும்   பலத்த சவாலை ஏற்படுத்தி தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும் ஜம்பத்திஎட்டுக்கு (58) இருபத்தியேழுஎன்ற ( 27) என்ற புள்ளிக்கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட அணியை வீழ்த்தி யாழ் மாவட்ட அணி வெற்றி பெற்றதாக வாழைச்சேனை  பிரதேச இளைஞர்சேவை அதிகாரி ரி.சபியதாஸ் எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.