(லியோன்)
நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்
இந்த செயல் திட்டங்கள் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .
இதற்கு அமைய ஏறாவூர் பற்று
பிரதேச சபையுடன் சர்வோதய நிழல் பிரதேச சபையும் , சர்வோதய தேசஉதய சபையும் இணைந்து
மாவட்ட சர்வோதய இணைப்பாளர் யு எல் எ .
கரீம் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று முன்னெடுத்தனர் .
இந்த நடவடிக்கையின் கீழ் ஏறாவூர் பிரதேச சபைகுற்பட்ட ஆறுமுகத்தான்
குடியிருப்பு சந்தியில் இருந்து தன்னாமுனை வரையிலான வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான
வீதியினை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன .
இந்த சிரமதான பணியில் ஏறாவூர் பிரதேச சபைகுற்பட்ட கிராம மக்கள்
மற்றும் சர்வோதய நிழல் பிரதேச சபை, சர்வோதய தேசஉதய சபை அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்