புதுக்குடியிருப்ப தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்.

(சசி துறையூர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதுக்குடியிருப்பு தொழிற்பயிற் நிலையத்தில் புதிய தொழிற்பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம்,  தையல்கலை அழகுக்கலை, நீர்க்குழாய் பொருத்துனர், கட்டுமான கைவினைஞர் போன்ற பயிற்சி நெறிகளோடு தொழில் சார் ஆங்கிலம்,  சிங்கள மொழி பயிற்சி போன்ற கற்கை நெறிகளை தொடர விரும்புகின்ற இளைஞர் யுவதிகள் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் ஊடகவும்,  வாரநாட்களில் நேரடியாக புதுக்குடியிருப்பு தொழிற் பயிற்சி நிலையத்துக்கு சமூகமளித்து அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ள முடியும். 

பயிற்சி நெறிகள் யாவும் இலவசமாக்கப்பட்டுள்ளதுடன், தூரப்பிரதேச மாணவர்களுக்கு பிரயாண கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.