அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

(லியோன்)

மட்டக்களப்பு  அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின்  திருக்கதவு  திறத்தல்  வைபவம்  04.07.2017  மாலை நடைபெறவுள்ளது .


அமிர்தகழி கிராமத்தில் மிகவும் நீண்டகாலமாக எழுந்தருளியுள்ள  அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம்  இப்பகுதியின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயமாகும்

இந்த  அம்மன் ஆலயத்தின்  வருடாந்த அலங்கார உற்சவம்  04ஆம் திகதி   செவ்வாய்கிழமை  மாலை  திருக்கதவு  திறத்தல்  உற்சவத்துடன்  பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும்  09. ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை கும்பம் சொரியும் நிகழ்வுடன் ஆலய வருடாந்த உற்சவம்  நிறைவுபெறும் .


ஆலய உற்சவ காலங்களில் தினமும்   விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலய  பிரதம பூசகர் வன்னமணி மாசிலாமணி  தலைமையில் நடைபெறும் .  


ஆலய உற்சவத்தின் 4ஆம்  நாள் சடங்கு  08. ஆம் திகதி  சனிக்கிழமை நெல்குத்தும்  வைபவம் நடைபெற்று   09. ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை இந்து சமுத்திரத்தில் நடைபெறவுள்ள  கும்பம் சொரியும் நிகழ்வுடன் அம்பாளின்  வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளது