(லியோன்)
கிழக்குமாகாண ஆளுநர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு இன்று
விஜயம் ஒன்றை மேற்கொண்டார் .
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர்
மற்றும் கல்லூரி பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்குமாகாண புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம இன்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு
விஜயத்தை மேற்கொண்டார் .
கிழக்குமாகாணத்திற்கு புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ரோஹித்த போகொல்லாகமவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமது கல்லூரியில் நிலவுகின்ற நிர்வாக கட்டமைப்புக்களின் குறைபாடுகள்
தொடர்பாக கலந்துரையாடப்பட்டதற்கு இணங்க இன்று இந்த விஜயத்தை மேற்கொண்டார் .
கல்லூரிக்கு வருகை தந்த ஆளுனரை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர் .
இதனை தொடர்ந்து அதிபரின் அலுவலகத்தில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன ,
இந்த கலந்துரையாடலின் போது கல்லூரியில் நிலவுகின்ற ஆசிரியர்கள்
பற்றாக்குறைகள் . பாடசாலை வளங்களின்
குறைபாடுகள் , மாகாண பாடசாலையாக இயங்கி வரும் கல்லூரியை தரம் உயர்த்துவது போன்ற
பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன .
இதன் போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் கேட்டறிந்துகொண்ட ஆளுநர் இதனை
தமது நிர்வாக கவணத்திற்கு கொண்டு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்