கல்லடி சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகர் தின ஊர்வலம்

சுவாமி விபுலானந்தரின் 70ஆவது சிரார்த்த தினம் மற்றும் கல்லடி சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகர் தின ஊர்வலம் என்பன, கல்லடியில் இன்று (19) காலை நடைபெற்றன.

சிவானந்தா பாடசாலையில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதி வழியாகச் சென்று, அவரின் சமாதிவரை வந்தடைந்தது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் தலைவர் கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா, சமாதிக்குத் தீபம் காட்டி மலரஞ்சலி செலுத்தினார்.

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவர்களால் விபுலானந்தரின் பாடல்கள் பாடப்பட்டதோடு, கலந்துகொண்டவர்களாளும் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவர்களின் ஊர்வலம் பாடசாலையினை அடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.