கோலாகலமாக நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முதல்நாள் திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்ப அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முதலாம் நாள் திருவிழா நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

முதலாம் நாள் திருவிழா மட்டக்களப்பு நீர்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.

ஆலயத்தின் தம்பபூஜை நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர்,சிவன்,முருகன் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றதுடன் வெளிவீதியுலாவும் நடைபெற்றது.

வாகனங்களில் எழுந்தருளிய மாமாங்கேஸ்வரர் வீதியுலா இன்னிய இசைக்குழு நாட்டியம் என்பன மத்தியில் வெளிவீதியுலா நடைபெற்றதுடன் நாதஸ்வர கச்சேரியும் நடைபெற்றது.