இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி சிவகாமசுந்தரி காலமானார்.


இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி அர்ச்சுனா தனது 81 ஆவது வயதில் நேற்று முன்தினம் (21.06.2017)  நியூசிலாந்தில் காலமாகியுள்ளார்.
இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியாக விளங்கிய அவரது உன்னதமான சேவைக் காலம் பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. துணிச்சலான பெண்மணியாக விளங்கிய இவர் உலகத் தமிழ்ப் பெண்களுக்கு முன்னுதாரணமாத் திகழ்ந்து விளங்கினார்.
வடமராட்சி புலோலி மேற்கைப் பிறப்பிடமாக கொண்ட இவர் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூ ரியில் கற்று சட்டதுறைக்குள் நுழைந்தார்.
1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கறிஞர் ஆகிய பின்னர் 1988 ஆம் ஆண்டு, மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று மல்லாகம், மன்னார் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்றினார் .
இறுதியாக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.   இவர் திருகோணமலையில் சேவையாற்றிய காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புப் பிரிவை ஆரம்பித்து வைத்தமை குறிபிடத்தக்கது .