தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் யுவதிகளின் ஆற்றல் திறன் போட்டிகள்


(லியோன்)

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில் இளைஞர் யுவதிகளின்  ஆற்றல் திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது


இதன்கீழ் தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தினால் மட்டக்களப்பு  மாவட்ட மட்டத்தில்  நடத்தப்படுகின்ற   போட்டிகளில்  தெரிவு செய்யப்படும் போட்டியாளர்கள் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர்.

இதற்கான தெரிவு போட்டிகள் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில்  (24) நடைபெற்றது.     

இந்தபோட்டி நிகழ்வுகளுக்கு  நடுவர்களாக  கல்லடி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்கள் , நடன ஆசிரியர்கள் , வைத்தியர்   , ஊடக துறையினர் , நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தர்கள் , சட்டத்தரணி  


இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உத்தியோகத்தர்களான  திருமதி .கலாராணி யேசுதாசன் ,  திருமதி . நிஷாந்தி அருள்மொழி , தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இளைஞர் ,யுவதிகள் ,பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர் .