எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்  (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
.

மட்டக்களப்பு எல்லை வீதி ஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர் வரும் 30 ஆம் திகதி தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெறவுள்ளது

 அதிகாலை ஆரம்பமான பூர்வாங்க கிரிகைகளை தொடர்ந்து  விசேட யாக பூசைகளை  இடம்பெற்று . தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய  விநாயகருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டது

ஆலய கொடியேற்ற உற்சவ  விசேட அபிஷேக பூசைகள்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரியை பூசணம் சிவஸ்ரீ .சி .செல்வராசக்குருக்கள் தலைமையில் இடம்பெற்று ( 24) நண்பகல் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது


இந்த உற்சவத்தில் பெருவிழா நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.