(லியோன்)
பெந்தகொஸ் தினத்தை சிறப்பிக்கும்
விசேட திருப்பலி ஆயர் தலைமையில் (04) ஞாயிற்றுகிழமை ஒப்புகொடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பெந்தகொஸ் தின விசேட
திருப்பலி இன்று மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில்
ஒப்புகொடுக்கப்பட்டது .
பெந்தகொஸ் தினத்தை சிறப்பிக்கும்
விசேட திருப்பலியில் பங்கு தந்தை
அருட்பணி அலக்ஸ் ரொபட் , மட்டக்களப்பு
புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தல பங்கு
தந்தை இன்னாசி ஜோசெப் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .
இந்த விசேட திருப்பலியில் மாணவர்களுக்கு புதுநன்மை ,உறுதிப்பூசுதல் ஆகிய தேவ அருள் அடையாளங்கள் ஆயரினால் வழங்கப்பட்டது .
இந்த விசேட திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர் .