(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி
முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ
முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வு இன்று (04) நடைபெற்றது .
மட்டு- நகரில்
சிறப்பு மிக்க ஆலயமாக விளங்கும் மட்டக்களப்பு
கல்லடி முகத்துவாரம்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய
புனராவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது .
கடந்த 31 .05.2016 புதன்கிழமை அதிகாலை 05.00 மணி தொடக்கம் 03.06.2017
சனிக்கிழமை மாலை வரை நடைபெற்ற பூர்வாங்க
கிரிகைகளை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை காலை விசேட யாக பூசைகளை தொடர்ந்து திவ்விய ஹோமம் பூசைகள்
இடம்பெற்று ஆலய விக்கிரகங்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் நடைபெற்றது .
அதனை தொடர்ந்து ஆலய
புனராவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன கும்பாபிஷேக நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுகிழமை நண்பகல் சுபவேளையில் நடைபெற்றது.
இன்று காலை
நடைபெற்ற யாக பூசை பூரணாகுதி விசேட
தீபாராதனை மற்றும் கும்ப உத்தாபனம் ஸ்தூபி
அபிஷேக பூஜைகளை தொடர்ந்து ஆலய புனராவர்த்தன
பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வுகள் பிரதிஷ்ட பிரதம குரு – சிவஸ்ரீ நித்திய சிவானந்த சிவாச்சாரியார் தலைமையில்
நடைபெற்றது . இந்நிகழ்வில்
பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்