இலங்கையில் மூவின மக்களும் இன்று இணக்கப்பாட்டுடன் வாழ்ந்துவருகின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வருகைதந்து தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பிரபல வர்த்தகரின் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டது.
பிள்ளையாரடியில் உள்ள மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் எஸ்.கணேசராஜா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் வள்ளுவர் சிலையினை அன்பளிப்பு செய்த தமிழகத்தின் பிரபல வர்த்தகரான செவாலியர் விருதுபெற்ற கலைமாமணி வி.ரி.சந்தோசம் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விசேடமாக இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ரி.வள்ளிநாயகம் உட்பட 32 பேராசிரியர்கள்,அறிஞர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின்போது பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பில் இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பிரபல வர்த்தகரின் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டது.
பிள்ளையாரடியில் உள்ள மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் எஸ்.கணேசராஜா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் வள்ளுவர் சிலையினை அன்பளிப்பு செய்த தமிழகத்தின் பிரபல வர்த்தகரான செவாலியர் விருதுபெற்ற கலைமாமணி வி.ரி.சந்தோசம் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விசேடமாக இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ரி.வள்ளிநாயகம் உட்பட 32 பேராசிரியர்கள்,அறிஞர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின்போது பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.