(லியோன்)
பேண்தகு பாடசாலை
அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சி திட்டத்தின்
கீழ் உணவு உற்பத்தி , சுற்றாடல் பாதுகாப்பு
,போதைபொருள் ஒழிப்பு , சிறுநீரக
நோய் தடுப்பு சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு போன்ற
தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு
கல்வி வலய பாடசாலைகளில் இந்த பேண்தகு பாடசாலை அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது .
இதன்கீழ்
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் “சூழல் எம்மைக்
காக்கும் நாம் சூழலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியும்
,விற்பனையும் கல்லூரி அதிபர்கே . அருமைராஜா தலைமையில் கல்லூரி
பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .
சுற்றாடலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் மாணவர்களின் விழிப்புணர்வு
நிகழ்வுகளும் இடம்பெற்றது
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ
.சுகுமாரன் , பிரதேச சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான திருமதி ஆர் .பாஸ்கரன் , கே .
லோகராஜா , மட்டக்களப்பு கனிஷ்ட வித்தியாலய அதிபர்
அருமைத்துரை மற்றும் மண்முனை
வடக்கு கல்வி கோட்ட பாடசாலைகளின் மாணவர்கள் ,ஆசிரியர்கள் என பலர்
கலந்துகொண்டனர்