(சசி துறையூர்)கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததானம்.
கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில், நேற்று புதன்கிழமை (07.06.2017) இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகமும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து பிரதேச செயலாளரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மனிதநேய செயற்பாடான இரத்ததானம் வழங்கல் நிகழ்வில் அதிகளவான பொது மக்கள் இளைஞர்கள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர் என வாகரை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.இர்ஷாத் அலி எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.
கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில், நேற்று புதன்கிழமை (07.06.2017) இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கோறளைப் பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகமும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து பிரதேச செயலாளரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மனிதநேய செயற்பாடான இரத்ததானம் வழங்கல் நிகழ்வில் அதிகளவான பொது மக்கள் இளைஞர்கள் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர் என வாகரை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.இர்ஷாத் அலி எமது செய்தி பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.