கிழக்கு பல்கலைக் கழக பொது பட்டமளிப்பு விழா நல்லையா மண்டபத்தில் நாளை(18)மு.ப 8.30 -பி.ப4.00 மணி வரை நான்கு கட்டங்களாக இடம் பெறுமென பல்கலைக் கழக சிரேஸ்ர உதவிப் பதிவாளர் அறிவித்துள்ளார். இந்நிகழ்வில் கலை கலாசாரம்,நுண்கலை,முகாமைத்துவம்,விவசாயம்,மருத்துவம் முதலிய பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா இடம்பெறும். கடந்த ஏப்ரல் மாதம் 08ம் திகதி இப்பட்டமளிப்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.