(லியோன்)
“ உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்
“ மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு நடைபெற்றது .
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி 2005 ஆம் ஆண்டு க .பொ .த உயர்தர மாணவர்களின் அனுசரணையில்
கல்லூரி அதிபர் ஜே ஆர் பி விமல்ராஜ் தலைமையில் “ உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்
“எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பிரதான
மண்டபத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் 204 வது ஆண்டு நிறைவினை சிரப்பிக்கும் வகையில் 2005 ஆம் ஆண்டு க .பொ .த உயர்தர மாணவர்களினால் நான்காவது
ஆண்டாக சிறப்பிக்கப்படுகின்றது .
கல்லூரி மாணவர்கள் சமூக பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலும்
மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும்
வகையிலும் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்த தான நிகழ்வில் கல்லூரி மாணவர்களுடன்
மட்டக்களப்பு பொலிஸ் திணைக்கள சமூக தொடர்பாடல் பொலிஸ் குழு உத்தியோகத்தர்களும்
கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்
இந்த இரத்ததான முகாம் இன்று காலை 09.00மணி முதல் பிற்பகல் 01.00மணி வரை நடைபெற்றது .
இந்த இரத்த தான
நிகழ்வில் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் நளின்
கருணாசேன , .வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள்
,பாடசாலை நலன் விரும்பிகள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,
மட்டக்களப்பு பொலிஸ் திணைக்கள சமூக தொடர்பாடல் பொலிஸ் குழு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்