பொலிஸ் திணைக்களத்தினால் மாபெரும் சிரமதான பணி


(லியோன்)

பொலிஸ் திணைக்களத்தினால்  மாபெரும் சிரமதான பணி (18)  ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில்  முன்னெடுக்கப்பட்டது  


மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தீஹா வதுற வின் வழிகாட்டலின் கீழ் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்  ஆலய வளாகம் மற்றும் ஆலய தீர்த்த  குலத்தினை துப்பரவு  செய்யும் மாபெரும் சிரமதான பணி   முன்னெடுக்கப்பட்டன  


பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ்  உத்தியோகத்தர்கள் மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள்  , ஆலய பரிபாலன சபையினர் என பலர் கலந்துகொண்டனர் .