(லியோன்)
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின்
வழிகாட்டலின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் துய்மையான இலங்கைக்கான இளைஞர்களின் குரல் எனும்
தொனிப்பொருளில் இம்முறை தேசிய இளைஞர் தின நிகழ்வு தேசிய ரீதியில்
இன்று கொண்டாடப்பட்டது .
மட்டக்களப்பு
மாவட்டத்திற்கான தேசிய இளைஞர் தின நிகழ்வு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் எஸ்
.திவிய நாதன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தை
பிரதிநிதிதத்துவ படுத்தி திருகோணமலையில்
நடைபெற்ற யோவுன் புர நிகழ்வில் முன்னோடி குழுவில் கலந்து கொண்டு சிறப்பித்த
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வும்இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம
விருந்தினராக மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களான திருமதி .கலாராணி யேசுதாசன் , திருமதி . நிஷாந்தி அருள்மொழி , தேசிய
இளைஞர் சேவைகள் மன்றம் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் பாராளுமன்ற
உறுப்பினர்கள் ,இளைஞர் ,யுவதிகள் கலந்துகொண்டனர் .