துய்மையான இலங்கைக்கான இளைஞர்களின் குரல் தேசிய இளைஞர் தின நிகழ்வு

(லியோன்)

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும்  துய்மையான இலங்கைக்கான இளைஞர்களின் குரல் எனும் தொனிப்பொருளில் இம்முறை தேசிய இளைஞர் தின நிகழ்வு தேசிய  ரீதியில்  இன்று  கொண்டாடப்பட்டது .


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய இளைஞர் தின நிகழ்வு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் எஸ் .திவிய நாதன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிதத்துவ படுத்தி  திருகோணமலையில் நடைபெற்ற யோவுன் புர நிகழ்வில் முன்னோடி குழுவில் கலந்து கொண்டு சிறப்பித்த மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வும்இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,  தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற   உத்தியோகத்தர்களான   திருமதி .கலாராணி யேசுதாசன் ,  திருமதி . நிஷாந்தி அருள்மொழி , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இளைஞர் ,யுவதிகள் கலந்துகொண்டனர் .