மட்டக்களப்பில் குடும்பஸ்தர் குத்திக்கொலை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி-4, உதயன்மூலை பாடசாலை வீதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (28) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை குறித்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் மூவருக்கு இடையில் இடம்பெற்றுள்ளதுடன் இருவர் ஏறாவூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சுற்றுவேலி என்பன அடித்து நொருக்கி சேதமாக்கபட்டுள்ளது.

உதயன்மூலை, பாடசாலையில் வீதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தக்கம் காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுகின்றதாக தெரியவருகின்றது.

குறித்த இடத்திற்கு ஏறாவூர் பொலிஸார் விரைந்து மேலதிக தகவலை திரட்டிவருகின்றனர்.