கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் தங்களது நிலமையினை புறக்கணித்து நடந்துகொள்வது கவலைக்குரிய விடயமாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டாதாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 43வது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்துவருகின்றது.
இன்றும் வீதியில் சமைத்து உண்டு தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.
வடக்கில் உள்ள வடமாகாண முதலமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாhகாண பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் கவலைக்குரியதாகவுள்ளதாகவும் தம்மை புறக்கணிக்கும் வகையில் செயற்படுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் எமது நிலைமையினை புரிந்துவிரைவான நடவடிக்கையினை எடுக்கும் என தாங்கள் எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 43வது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்துவருகின்றது.
இன்றும் வீதியில் சமைத்து உண்டு தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.
வடக்கில் உள்ள வடமாகாண முதலமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமாhகாண பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கிழக்கு மாகாண அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் கவலைக்குரியதாகவுள்ளதாகவும் தம்மை புறக்கணிக்கும் வகையில் செயற்படுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் எமது நிலைமையினை புரிந்துவிரைவான நடவடிக்கையினை எடுக்கும் என தாங்கள் எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.