சிறுதேன்கல் சித்திவிநாயகர் வித்தியாலகத்தில் பாடசாலை கட்டிடம் திறப்பு விழா

அதிகாரிகள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வழிப்படுத்தவேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.


இன்று மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுதேன்கல் சித்திவிநாயகர் வித்தியாலகத்தில் பாடசாலை கட்டிடம் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி ருத்திராதேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் 20இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வகுப்பறைக்கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய விவசாய அமைச்சர்,

இவ்வாறான தமிழர்களின் வரலாற்று பகுதிகள் பாதுகாக்கப்படவேண்டும்.அதற்காக இப்பகுதியை சேர்ந்த மக்கள் கல்வியில் நாட்டம்கொள்ளவேண்டும்.