மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெழும்பு இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்ல கொண்டுவரப்பட்டபோதே ஊடகவியலாளர்களிடம் இக்கருத்தை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கல்குடாவில் மதுபான உற்பத்தி நிலையம் இன்னும் மூடப்படவில்லை.கிழக்கு மாகாண முதலமைச்சர் நீதித்துறை மூலம் நடவடிக்கையெடுக்கப்போகின்றேன் என்று கூறினார் ஆனால் இன்னும் நடவடிக்கையெடுக்கப்படவில்லை.
இதுதொடர்பில் சந்தேகமாகவுள்ளது.அனைத்து அரசியல்வாதிகளும் காசினைப்பெற்றுவிட்டார்களோ தெரியாது.
மதுபான உற்பத்தி நிலையம் பிராந்திய பிரதேச சட்டத்தினை மீறிய செயற்பாடாகும்.அதனை நன்றாக தெரிந்துகொண்டும் அதனை நிறுத்தமுடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.
இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்ல கொண்டுவரப்பட்டபோதே ஊடகவியலாளர்களிடம் இக்கருத்தை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கல்குடாவில் மதுபான உற்பத்தி நிலையம் இன்னும் மூடப்படவில்லை.கிழக்கு மாகாண முதலமைச்சர் நீதித்துறை மூலம் நடவடிக்கையெடுக்கப்போகின்றேன் என்று கூறினார் ஆனால் இன்னும் நடவடிக்கையெடுக்கப்படவில்லை.
இதுதொடர்பில் சந்தேகமாகவுள்ளது.அனைத்து அரசியல்வாதிகளும் காசினைப்பெற்றுவிட்டார்களோ தெரியாது.
மதுபான உற்பத்தி நிலையம் பிராந்திய பிரதேச சட்டத்தினை மீறிய செயற்பாடாகும்.அதனை நன்றாக தெரிந்துகொண்டும் அதனை நிறுத்தமுடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.