(லியோன்)
தடைசெய்யப்பட்ட செயல் திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத
நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக
பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .
இலங்கை மத்திய வங்கியின் கிழக்குமாகான
பிரதேச அலுவலகத்தினால் அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ஆகிய மூன்று
மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட சட்ட விரோத செயல்பாடுகள் , அதிகாரமாக்கப்படாத நிதி
நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட வேண்டிய
சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவு படுத்து
செயலமர்வுகள் மாவட்ட ரீதியாக பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரிகளுக்கும் ,பொலிஸ்
உத்தியோகத்தர்களுக்கும் நடத்தப்பட்டு வருகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள்
மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ஒரு
நாள் செயலமர்வு கிழக்கு மாகாண பிரதேச அலுவலக முகாமையாளர் திருமதி கார்த்திகா
நிரோசன் தலைமையில் மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் (23) வியாழக்கிழமை நடைபெற்றது .
இந்த செயலமர்வில் வளவாளராக வங்கிகள் மேற்பார்வை திணைக்கள சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் அருண விஜய ஸ்ரீறி ,மட்டக்களப்பு மாவட்ட
பொலிஸ் அத்தியட்சகர் கே .பி .
கீர்த்திரத்ன மற்றும் செயலமர்வில் மட்டக்களப்பு
மாவட்ட பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர் .