அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு

(லியோன்)

தடைசெய்யப்பட்ட  செயல் திட்டங்கள் மற்றும் அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள்  தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை மத்திய வங்கியின் கிழக்குமாகான பிரதேச அலுவலகத்தினால் அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில்    தடைசெய்யப்பட்ட சட்ட விரோத  செயல்பாடுகள் , அதிகாரமாக்கப்படாத நிதி நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில்  பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவு படுத்து  செயலமர்வுகள் மாவட்ட ரீதியாக பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரிகளுக்கும்  ,பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும்   நடத்தப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான  ஒரு நாள் செயலமர்வு கிழக்கு மாகாண பிரதேச அலுவலக முகாமையாளர் திருமதி கார்த்திகா நிரோசன் தலைமையில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் (23) வியாழக்கிழமை  நடைபெற்றது .  

இந்த செயலமர்வில்  வளவாளராக வங்கிகள் மேற்பார்வை திணைக்கள சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் அருண விஜய ஸ்ரீறி ,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்  கே .பி . கீர்த்திரத்ன  மற்றும் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சிவில் பாதுகாப்பு குழு  உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர் .