எங்களின் நிலைமையை அரசாங்கம் திரும்பிப்பார்க்கவேண்டும் -மட்டு.வேலையற்ற பட்டதாரிகள் வேண்டுகோள்

வேலையற்ற பட்டதாரிகளின் நிலமையினை அரசாங்கம் திரும்பிப்பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 35வது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இன்றும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றுவருகின்றனது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வீதிகளில் உறங்கி தாம் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் வேலையற்ற பட்டாதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது நிலைமை தொடர்பில் மத்திய மாகாண அரசாங்கங்கள் கவனத்தில் கொண்டுசெயற்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.