(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி நாவலடி கடற்கரை பகுதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி – நாவலடி
பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் (05) ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் .
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை
காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய
இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .
சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 55, 60 வயது
மதிக்கத்தக்க வயோதிபர் என அடையாளம் காணப்பட்ட போதிலும் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை எனவும்
பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இது தொடர்பான விசாரணைகளை
காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .