நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு

(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி நாவலடி கடற்கரை பகுதியில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி – நாவலடி பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் (05) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் .

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 55, 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் என அடையாளம் காணப்பட்ட போதிலும்  மேலதிக  தகவல்கள் எதுவும் கிடைக்கப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர் .
இது  தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .