மட்டக்களப்பில் ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் மாபெரும் கண்காட்சி

ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் நடாத்தப்படும் விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தரவர்த்தக நிறுவனங்கள் பங்குகொள்ளும் “பெண்கள் காந்த சக்தி 2017”மாநாடும் கண்காட்சியும் எதிர்வரும் வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9.30மணிக்கு கல்லடி பாலம் அருகில் உள்ள பாலம்சந்தையில் ஆரம்பமாகும் இந்த கண்காட்சி 24ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை 7.30மணி வரையில் பார்வையிடமுடியும்.

மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில் ஒக்ஸ்பாம் அனுசரணையுடன் இலங்கை சமூக நிறுவனத்தால்(ஸ்ரீலங்கா சோசியல் வென்சஸ்)வடகிழக்கு சமூக பொருளாதார அபிவிருத்தியாளர் பங்களிப்புடன் இந்த கண்காட்சியும் மாநாடும் ஓழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டத்தில் ஓக்ஸ்பாம் திட்டங்கள் மூலம் அனுசரணை வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கும் தங்களது அனுபவங்களையும் சிறந்த தொழில் முறைகளையும் ஏனைய சேவை வழங்கு ஏனைய சேவை வழங்குகின்ற பங்குதாரர்களுடனும் அதனுடன் தொடர்புகொண்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடனும் பகிர்ந்துகொள்வதற்கான தளத்தினையும் தொடர்புகளையும் உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தினை இதன் மூலம் வழங்கமுடியும்.

இந்த நிகழ்வானது மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் ,தொழிலதிபர்கள், சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள்,இதனுடன் தொடர்புகொண்ட அதிகாரிகள்,தொழில் ஆரம்பிக்கவுள்ளவர்கள்,இதனுடன் தொடர்புபட்ட அரச,தனியார் துறையை சேர்ந்தவர்கள்,ஆய்வுகள் மேற்கொள்பவர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் ஆகியோருக்கு சிறந்த நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் காட்சியறை தொடர்பான விபரங்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சி பட்டறைகளில் பங்குபற்றுவதற்கும் வேறு தொடர்பான பிரசங்களுக்கும் 0773237541 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ batticaloa@lsv.lk  எனும் மின்னஞ்சலுடன் தொடர்புகொள்ளமுடியும்.