சிசிலியா பெண்கள் பாடசாலை ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

(லியோன்)


புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை  ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பும், பெற்றோர் தின நிகழ்வும் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு  புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை  ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு பெற்றோர் தின நிகழ்வும் பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் பாடசாலை மண்டபத்தில்  (15) புதன்கிழமை  நடைபெற்றது .   

நடைபெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு  நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு  மாணவர்களினால் மலர் செண்டு வழங்கி அழைத்து வரப்பட்டனர் .

இதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள்  மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பமானது .

இந்நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது . நிகழ்வினை தொடர்ந்து அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் அதிதிகளாக யுனிசெப் பிராந்திய தலைமை திட்ட முகாமையாளர் திருமதி . ஆர் . பேட்டர்சன் ,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக முகாமைத்தவ பிரதி பணிப்பாளர் எஸ் எம் .ஹைதரலி மற்றும் அருட் தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்