(லியோன்)
புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பும், பெற்றோர்
தின நிகழ்வும் நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு
புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு
பெற்றோர் தின நிகழ்வும் பாடசாலை அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் பாடசாலை
மண்டபத்தில் (15) புதன்கிழமை நடைபெற்றது .
நடைபெற்ற ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த
பரிசளிப்பு நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக
அதிதிகளுக்கு மாணவர்களினால் மலர் செண்டு
வழங்கி அழைத்து வரப்பட்டனர் .
இதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது .
இந்நிகழ்வில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கலை
நிகழ்வுகள் இடம்பெற்றது . நிகழ்வினை தொடர்ந்து அதிதிகளினால் மாணவர்களுக்கு பரிசில்கள்
வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .
இந்நிகழ்வில் அதிதிகளாக யுனிசெப் பிராந்திய தலைமை திட்ட முகாமையாளர்
திருமதி . ஆர் . பேட்டர்சன் ,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக முகாமைத்தவ பிரதி
பணிப்பாளர் எஸ் எம் .ஹைதரலி மற்றும் அருட் தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பாடசாலை
ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்