காத்தான்குடி பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு.

(சசி துறையூர்) காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு.

டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் காத்தான்குடி பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி நூரானியா மையவாடியில் இன்று 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் AFM.சுஹைல், அதன் செயலாளர் MM.சமீலுல் இலாஹி (இளைஞர் சேவை அதிகாரி),  அதன் உப செயலாளர் MIM.சிஹாப்,  அமைப்பாளர் MIM.ஹரூஸ், உப அமைப்பாளர் ANS.ஹிலால், சூழல் சுற்றாடல் பிரிவுச்செயலாளர் MBR.ஸைனி, ஒழுக்காற்றுக்குழுத்தலைவர் AC.றின்ஸான் அதன் உறுப்பினர் MJM.றிப்கி , SM.ஸஜா உட்பட பல இளைஞர் கழக உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர் .

டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம்    காத்தான்குடி பிரதேச இளைஞர் சம்மேளனத்தினால் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வீடு வீடாக சென்று பார்வையிடும் நிகழ்வும்  சுகாதா அதிகாரி அலுவலகத்தோடு இனைந்து நடாத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது .