மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 33வது தினமாகவும் இன்று சனிக்கிழமை தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.
வீதியில் உணவு சமைத்து வீதியில் உண்டு தமது போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தமது போராட்டத்திற்கு தமது பெற்றோர் உற்றார் உறவினர்களின் ஆதரவினைக்கோரியுள்ள அவர்கள் தமது போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
மத்திய மாகாண அரசாங்கங்கள் 33நாட்களை எமது போராட்டம் கடந்துள்ள போதிலும் இதுவரையில் சாதமான முடிவினை அறிவிக்காதது கவலையளிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எந்த தடைகள் ஏற்படினும் தமத கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீதியில் உணவு சமைத்து வீதியில் உண்டு தமது போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தமது போராட்டத்திற்கு தமது பெற்றோர் உற்றார் உறவினர்களின் ஆதரவினைக்கோரியுள்ள அவர்கள் தமது போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
மத்திய மாகாண அரசாங்கங்கள் 33நாட்களை எமது போராட்டம் கடந்துள்ள போதிலும் இதுவரையில் சாதமான முடிவினை அறிவிக்காதது கவலையளிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எந்த தடைகள் ஏற்படினும் தமத கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.