வேலையற்ற பட்டதாரிகளின் 31வது நாள் போராட்டகளம் மாற்றமடைகின்றது

வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் நாளை வியாழக்கிழமை இரத்ததானம் வழங்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.

போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி தமது இலக்கினை நோக்கி செல்லுதல் என்னும் வகையில் சமூக நோக்குடன் இந்த இரத்தானம் வழங்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை காலை காந்தி பூங்கா முன்பாகவில் இருந்து சார்ள்ஸ் மண்டபம் வரையில் சென்று அங்கு இந்த இரத்தான முகாம் நடைபெறவுள்ளது.