லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும்
விசேட ஒளி விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்று
வருகின்றது .
இதற்கு அமைய மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக மகா
சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்களின்
ஏற்பாட்டில் ஒளி விழா நிகழ்வு வாழ்வின் எழுச்சி திவிநெகும முகாமைத்துவ
பணிப்பாளர் திருமதி .கிரிதராஜ் நிர்மலா தலைமையில் புளியந்தீவு வாழ்வின் எழுச்சி
சமுதாய அடிப்படை வங்கி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது .
நடைபெற்ற ஒளி விழா நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மகா சங்க
நிறைவேற்று குழு உறுப்பினர்களின் கரோல்
கீதங்கள் மாணவர்களின் கலை நிகழ்வுகள்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு சிறிய குருமட துணை அதிபர் அருட்பணி
ஜெரிஸ்டன் வின்சென் மற்றும் புளியந்தீவு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி
சங்க அலுவலக உத்தியோகத்தர்கள் , மகா சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள் , பாடசாலை
மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்