புன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா

மட்டக்களப்பு புன்னைச்சோலை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

புன்னைச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஒளிவிழா நிகழ்விற்கு அதிதிகளாக அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மற்றும் முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி கே.டேவிட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக:கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது ஒளிவிழாவின் மகிமை தேவன் பிறப்பு தொடர்பில் முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி கே.டேவிட் சிறப்புரையாற்றினார்.

அத்துடன் நிகழ்வின்போது தேவன் பிறப்பு காட்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் நத்தார் பாப்பாவும் வருகைதந்து மாணவர்களையும் பெற்றோரையும் அதிதிகளையும் மகிழ்ச்சிபடுத்தினார்.