பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உற்பட மூவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்

  (லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிள்ளையாரடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உற்பட வாகனத்தில் பயணித்த  மூவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
.

இன்று (07) மாலை மட்டக்களப்பு மயிலம்பாவெளி பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த  கார் மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளானதாக மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இதன்போது  வாகனத்தில்  பயணித்த வாகன சாரதி உட்பட வாகன உரிமையாளர் மற்றும் நண்பர்கள் இருவர்  எதுவித காயங்களும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .