அமிர்தகழி கருணை பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வுகள்

(லியோன்)

மட்டக்களப்பு  அமிர்தகழி கருணை  பாலர் பாடசாலை சிறார்களின்   ஒளிவிழா  நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .


கிறிஸ்து  பிறப்பு  விழாவை  முன்னிட்டு  ஒளிவிழா  கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும்  வேளையில்  மட்டக்களப்பு  அமிர்தகழி கருணை பாலர் பாடசாலை சிறார்களின்   ஒளிவிழா  நிகழ்வுகள்  இன்று 26.11.2016 சனிக்கிழமை மட்டக்களப்பு அமிர்தகழி  சித்தி விநாயகர்  மகா வித்தியாலய  மண்டபத்தில்  நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி .பிரதீபா தர்சன்  தலைமையில் நடைபெற்ற ஒளிவிழா  நிகழ்வில்   பிரதம  விருந்தினராக  மட்டக்களப்பு அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு தந்தை சி .வி அன்னதாஸ் சிறப்பு விருந்தினர்களாக   மட்டக்களப்பு வலயக் கல்வி  முன்பள்ளி  உதவிக் கல்வி பணிப்பாளர் எம் .புவிராஜ் , அருட்பணி ஜெயகாந்தன்  ,அருட்பணி ஜெரஸ்டன் வின்சென்ட்  , பாலமீன் மடு பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி  கே எஸ் . விஜேசிங்க மற்றும் சிறார்களின் பெற்றோர்கள் கலந்து ஒளிவிழா நிகழ்வினை சிறப்பித்தனர்  .
ஒளிவிழா  நிகழ்வில் பாடசாலை  சிறார்களின்  நத்தார் ஒளிவிழா கலை நிகழ்வுகள்   இடம்பெற்றதோடு  சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது

இறுதி நிகழ்வாக   பிரதம  விருந்தினர்களின்  விசேட   ஒளிவிழா செய்திகளுடன்  , நத்தார்  தாத்தாவின்  ஆடல்,பாடல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு  ஒளிவிழா  இனிதாக  நிறைவு பெற்றது