மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் முகாம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும்.

(சசி துறையூர்)

கெளரவ பிரதமரின் கொள்கை திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டீல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்ற இளைஞர் யுவதிகளின் ஆளுமை தலைமைத்துவ விருத்திக்கான இளைஞர் முகாம் மண்முனைப் பற்று பிரதேச  இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய பாடசாலையில்  நடைபெறவுள்ளது எனவும் முகாம் வேலைத்திட்டத்துக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்,  மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி வி.தருமரெத்தினம் தெரிவித்தார்.

18.11.2016 வெள்ளிக்கிழமை பி.ப 03.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் MLMN நைறூஸ், அவர்களும்,  விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட,  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி யேசுதாஸ் கலாராணி, திருமதி நிஸாந்தி அருள்மொழி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். என மேலும் அவர் தெரிவித்தார்.