(லியோன்)
சமூக பொருளாதார அபிவிருத்தியும் , பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை
மட்டுப்படுத்தல் தொடர்பான மூன்று நாள்
வதிவிட பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியா
அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் சமூக பொருளாதார அபிவிருத்தியும் , பாதுகாப்பற்ற
புலம் பெயர்தலை மட்டுப்படுத்தலும் என்ற
திட்டத்திற்கு அமைவாக மூன்று நாள் சமூக
வலுவூட்டல் பயிற்சி பட்டறை மட்டக்களப்பு
மான்ரேசா விடுதியில் நடைபெற்றது .
சமூக வலுவூட்டல் பயிற்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட ஒன்பது கிராமங்களின் சமூக வலுவூட்டாலர்களும் அம்கோர் நிறுவன
ஊழிகர்களுக்குமான இந்த மூன்று நாள்
வதிவிட பயிற்சி பட்டறை நடைபெற்றது . இந்த
பயிற்சி பட்டறையில் சமூக வலுவூட்டல் , தலைமைத்துவம் . சிறந்த தொடர்பாடல் ,
நேரமுகாமைத்துவம் . பிரச்சினைகளை இனம் காணல் மற்றும் பிரச்சினைகளுக்கான
தீர்வுகளும் என்ற தலைப்பின் கீழ் பயிற்சிகள் வழங்கப்பட்டன .
இந்த பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக
மட்டக்களப்பு அம்கோர் நிறுவன தலைமை அதிகாரி ப . முரளிதரன் , நிறுவன திட்ட முகாமையாளர் வை .சிவயோகராஜன் கலந்துகொண்டதுடன் இந்த மூன்று
நாள் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகழ்வில் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் வெளிகள உத்தியோகத்தர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.