மட்டக்களப்பு வின்ஸ்டன் முன்பள்ளி சிறார்களின் ஆண்டு நிறைவு விழா

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட முன்பள்ளி  சிறார்களின்  ஆண்டு நிறைவு விழா  நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .


இதற்கு அமைய மட்டக்களப்பு  வின்ஸ்டன் முன்பள்ளி  சிறார்களின்    ஆண்டு நிறைவு விழா அதிபர் திருமதி . வி  .போல்  தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில்  நடைபெற்றது .

முன்பள்ளி சிறார்கள்  தமது முன்பள்ளி  கல்வியினை நிறைவு செய்து பாடசாலைகளுக்கு செல்லவுள்ள நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒழுங்கமைப்பில் இவர்களை  கௌரவிக்கும் வகையில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் அவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது

இந்நிகழ்வில் அதிதிகளாக யுன்  நிறுவன பணிப்பாளர்  மார்க்க பட்டர்சன் , யுனிசெப்  திட்ட முகமையாளர்  ரெபன்சியா பட்டர்சன்,  ஒய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர்  கே .டேவிட் , மட்டக்களப்பு ஜோசப் வித்தியாலய அதிபர் எம்.ஐ .சுதாகரன் , முன்பள்ளி ஆசிரியர்களான  செல்வி . சிவ்ரா ஜோன்சன் , ,திருமதி .சிறி நந்தினி   ஜுட் நிக்சன்  பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .